குழந்தை பெத்து வளர்க்க முடியலைன்னா ஏன் பெத்துக்கிறீங்க: பாலாஜி முருகதாஸ் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதல் ஒரு நாள் மட்டுமே அறந்தாங்கி நிஷாவின் காமெடியால் கலகலப்பாக சென்றது. அதற்கு அடுத்த நாளிலிருந்து சொந்த கதை, சோக கதை சொல்லும் படலம் தொடங்கியது. இதனால் சண்டை சச்சரவு பாதி, சோகக்கதை பாதி என என மாறி மாறி நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் பாலாஜி முருகதாஸ் தனது சோகக் கதையைக் கூறுகிறார். தன்னுடைய தந்தையும் தாயும் தன்னை சரியாக வளர்க்கவில்லை என்றும், பள்ளியில் சேர்த்ததோடு சரி, அதன் பிறகு தன்னை அவர்கள் கவனிக்கவில்லை என்றும் உருக்கமாக கூறுகிறார்

உங்களால் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறீர்கள் என்று சில தவறான பெற்றோர்களுக்கு செருப்படி தரும் வகையில் அவரது பேச்சு அமைந்தது

பாலாஜி முருகதாஸ் உருக்கமாக தனது பெற்றோர் குறித்து கூறியதை அடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் ஆறுதல் கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிந்துள்ளது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் ரேகா-சனம் சண்டை மற்றும் பாலாஜியின் சோகக்கதை ஆகியவை கலந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

தனது கால்களை வைத்தே கின்னஸ் சாதனை புத்தகத்தில் தடம் பிடித்த சிறுமி… சுவாரசியத் தகவல்!!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலர் உயிரை விட்டு சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொல்லியல் துறை தகுதிப் பட்டியலில் தமிழை ஏற்றம்பெற வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!!

தொல்லியல்  துறை வழங்கும் 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி

முகமூடியுடன் கோவில் கோவிலாக சுற்றும் சிம்பு!

நடிகர் சிம்பு இந்த லாக்டவுன் நேரத்தில் கேரளா சென்று உடல் எடையை குறைத்து வந்தார் என்றும் அவரது உடல் எடை தற்போது ஆச்சரியப்படத்தக்க வகையில் மாறியிருப்பதாகவும் பழைய சிம்புவை மீண்டும் பார்க்கலாம்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகி: இன்று முதல் படப்பிடிப்பு!

சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', உதயநிதி நடித்த 'இது கதிர்வேலன் காதலன்', விக்ரம் பிரபு நடித்த 'சத்ரியன்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன்

மருத்துவமனையின் அறிக்கையால் மகிழ்ச்சி அடைந்த விஜயகாந்த் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு