close
Choose your channels

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகி: இன்று முதல் படப்பிடிப்பு!

Friday, October 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடித்த ’சுந்தரபாண்டியன்’, உதயநிதி நடித்த ’இது கதிர்வேலன் காதலன்’, விக்ரம் பிரபு நடித்த ’சத்ரியன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இவர் இயக்கிய ’கொம்பு வச்ச சிங்கம்’ என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இவர் தனது பாணியில் மற்றொரு கிரைம் திரில்லர் படம் ஒன்றை தொடங்கி உள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் ஜெயபிரகாஷ் நடிக்க உள்ளார்

எஸ்.ஆர்.பிரபாகரனின் சொந்த நிறுவனமான பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.