பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத போட்டியாளர்.. என்ன காரணம்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன் முடிவடைந்த உடன் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்பது தெரிந்ததே. இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர் ஒருவர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதில் எதிர்பாராத வகையில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இதனால் விக்ரமன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. கமலஹாசனால் ஒவ்வொரு வாரமும் பாராட்டப்பட்ட விக்ரமனுக்கு டைட்டில் பட்டம் கிடைக்காமல் கமல்ஹாசனால் ஒவ்வொரு வாரமும் விமர்சனம் செய்யப்பட்ட அசீமுக்கு கிடைத்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டிய நிலை உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிலையில் நிவாஸினி மட்டும் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. மலேசியா மாடல் அழகியான நிவாஸினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு காரணம் தெரியவில்லை என்றாலும் அவரும் விளம்பரம் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அசல் கோளார் மற்றும் நிவாஸினி நெருக்கமாக பழகினார்கள் என்பதும் இதனால் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments