பிக்பாஸ் தமிழ் பிரபலத்திற்கு பாலியல் தொந்தரவு.. கார் டிரைவர் கைது..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவருக்கு அவருடைய கார் டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் ஷெரீனா. இவர் குறைந்த நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும் இவருடைய சமூக வலைத்தள பக்கத்தை ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷெரினா சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் அவருடைய கார் டிரைவர் அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து டிரைவரை வேலையில் இருந்து ஷெரினா நீக்கிய நிலையில் அவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஷெரினாவுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஷெரினாவின் மேனேஜர் சென்னை காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில் டிரைவர் மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது தன்னை வேலையை விட்டு நீக்கியதால் அந்த ஆத்திரத்தில் செல்போனில் மிரட்டல் விடுத்ததாக கார் டிரைவர் கார்த்திக் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து டிரைவர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments