இனிமேல் நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை: சனம் ஷெட்டியின் கண்ணீர் பேட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய் இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோதிலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். ஒருவரை ஒருவர் விரும்புவதாகவோ காதலிப்பதாகவோ இதுவரை அவர்கள் கூறியதில்லை. இந்த நல்ல நட்பை வனிதா வீட்டுக்குள் வந்தது முதல் கொச்சைப்படுத்தினார். தான் வெளியே சென்றிருந்தபோது தர்ஷன் காதலியின் பேட்டியை பார்த்ததாகவும், வெளியே ஒரு ரிலேசன்ஷிப் தர்ஷனுக்கு இருக்கும்போது அவனுடன் உனக்கு ஈர்ப்பு தேவையில்லாதது என்றும் ஷெரினிடம் அவர் வழக்கம்போல் பற்ற வைத்தார். தர்ஷன் மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை, அவன் எனக்கு ஒரு நல்ல நண்பன், அதை தாண்டி எதுவும் இல்லை, என்னால் தர்ஷனும், தர்ஷனுக்காக காத்திருக்கும் வெளியே இருப்பவருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்றும் ஷெரின் ஷெரின் தெளிவாக கூறியும் இந்த பிரச்சனையை வனிதா பெரிதாக்கி வருகிறார்.

இந்த பிரச்சனையால் பிக்பாஸ் டைட்டிலை நெருங்கிய தர்ஷனுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தர்ஷனை காதலிப்பதாக கூறப்படும் நடிகை சனம் ஷெட்டி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். ’தர்ஷனுக்கு என்றுமே நான் ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறேன். என்னால் தர்ஷனுக்கு இமேஜ் கெட்டுப்போவதாக இருந்தால், அவர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க நான் தடையாக இருப்பது போல் தெரிந்தால் நான் அவரை விட்டு தாராளமாக விலகிவிடுகிறேன்.

நான் தர்ஷன் மேல் உயிரையே வைத்துள்ளேன். இருந்தாலும் என்னால் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இருக்கக்கூடாது. நான் வெளிப்படுத்தும் விஷயங்களால் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மனவேதனை ஏற்படுகிறது என்றால் அதற்காக நான் வருந்துகிறேன். தர்ஷன், ஷெரின் இருவரும் என்னால் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் நான் எந்த ஒரு பேட்டியிலும் தர்ஷன் குறித்து பேச மாட்டேன். இந்த நிமிஷத்தில் இருந்து நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை. இருந்தாலும் என் மனதில் எப்போதும் தர்ஷன் இருப்பார்’ என்று கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

 

More News

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

'ரஜினி கட்சி தொடங்கி கட்சி கொடி, கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும்

தனுஷின் 'அசுரன்' படத்தின் சூப்பர் அப்டேட் அறிவிப்பு

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் எதிர்பாராத காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உயிருடன் புதைக்கப்பட்ட அரியவகை மான்: அதிர்ச்சி வீடியோ

பீகார் மாநிலத்தில் நீலான் என்ற அரிய வகை மான், கூட்டம் கூட்டமாக வந்து விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்த பயிர்களை நாசமாக்குவதாக வனத்துறையினர்களுக்கு புகார் வந்தது.

அபராதம் கேட்டதால் ஆத்திரம்: சொந்த பைக்கையே கொளுத்திய போதை ஆசாமி!

செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கட்சி ஆரம்பித்தால் டிடிவி நிலைதான் ரஜினிக்கு ஏற்படும்: தமிழக அமைச்சர்

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி குறித்த செய்தி வெளிவராத நாளே இருக்காது என்று கூறலாம். ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும்,