close
Choose your channels

இனிமேல் நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை: சனம் ஷெட்டியின் கண்ணீர் பேட்டி!

Saturday, September 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய் இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோதிலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். ஒருவரை ஒருவர் விரும்புவதாகவோ காதலிப்பதாகவோ இதுவரை அவர்கள் கூறியதில்லை. இந்த நல்ல நட்பை வனிதா வீட்டுக்குள் வந்தது முதல் கொச்சைப்படுத்தினார். தான் வெளியே சென்றிருந்தபோது தர்ஷன் காதலியின் பேட்டியை பார்த்ததாகவும், வெளியே ஒரு ரிலேசன்ஷிப் தர்ஷனுக்கு இருக்கும்போது அவனுடன் உனக்கு ஈர்ப்பு தேவையில்லாதது என்றும் ஷெரினிடம் அவர் வழக்கம்போல் பற்ற வைத்தார். தர்ஷன் மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை, அவன் எனக்கு ஒரு நல்ல நண்பன், அதை தாண்டி எதுவும் இல்லை, என்னால் தர்ஷனும், தர்ஷனுக்காக காத்திருக்கும் வெளியே இருப்பவருக்கும் எந்த பிரச்சனையும் வராது என்றும் ஷெரின் ஷெரின் தெளிவாக கூறியும் இந்த பிரச்சனையை வனிதா பெரிதாக்கி வருகிறார்.

இந்த பிரச்சனையால் பிக்பாஸ் டைட்டிலை நெருங்கிய தர்ஷனுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தர்ஷனை காதலிப்பதாக கூறப்படும் நடிகை சனம் ஷெட்டி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார். ’தர்ஷனுக்கு என்றுமே நான் ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறேன். என்னால் தர்ஷனுக்கு இமேஜ் கெட்டுப்போவதாக இருந்தால், அவர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க நான் தடையாக இருப்பது போல் தெரிந்தால் நான் அவரை விட்டு தாராளமாக விலகிவிடுகிறேன்.

நான் தர்ஷன் மேல் உயிரையே வைத்துள்ளேன். இருந்தாலும் என்னால் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இருக்கக்கூடாது. நான் வெளிப்படுத்தும் விஷயங்களால் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மனவேதனை ஏற்படுகிறது என்றால் அதற்காக நான் வருந்துகிறேன். தர்ஷன், ஷெரின் இருவரும் என்னால் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் நான் எந்த ஒரு பேட்டியிலும் தர்ஷன் குறித்து பேச மாட்டேன். இந்த நிமிஷத்தில் இருந்து நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை. இருந்தாலும் என் மனதில் எப்போதும் தர்ஷன் இருப்பார்’ என்று கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.