யார் உண்மையான பச்சோந்தி? வெளிச்சம் போட்டு காட்டிய கமல்? 

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களாகிய 16 பேர்களில் ஒருவரை பற்றி ஒருவர் பின்னால் பேசாமல் இருந்ததாக வரலாறே இல்லை. வெளியில் என்ன நடக்கின்றது என்பது அவர்களுக்கு தெரியாததால் உள்ளே இருப்பவர்களை பற்றி மட்டுமே அவர்களால் பேச முடியும். இது மூன்று சீசன்களிலும் தொடர்ந்து வரும் ஒரு வழக்கமான நிலையே. ஆனால் லாஸ்லியா மட்டுமே மற்றவர்களை பின்னால் இருந்து பேசியதாக கூறிய சாக்‌ஷி நேற்று அவருக்கு பச்சோந்தி விருதினை கொடுத்தார். இதனால் லாஸ்லியா கடுப்பாகி சாக்‌ஷியுடன் விவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் சாக்சிதான் உண்மையான பச்சோந்தி என்பதை வெளிச்சம் போட்டு காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ’நீங்க ஏன் உள்ளே போய் ‘வெளியில இருந்து பார்க்குறதுக்கு கியூட் ஆக இருக்குதுன்னு சொன்னீங்க’ என்று சாக்சியை பார்த்து கமல் கேட்கின்றார். அதற்கு சாக்‌ஷி, ‘ஆமாம் நான் ரெண்டு பேரையும் பார்க்க கியூட்டாக இருக்கின்றார்கள் என்றுதான் கூறினேன் என்று கூறினார். அதற்கு கமல், ‘ஆனால் ஷெரின்கிட்ட என்ன சொன்னிஙக’ என்று கேட்டுவிட்டு அதன் பின்னர் ஷெரினிடம் சாக்‌ஷி எப்படிப்பட்டவர் என்பதையும் விளக்க, ஷெரினுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதன்மூலம் சாக்சி தான் உண்மையான பச்சோந்தி என்பதை கமல் வெளிச்சம் போட்டு காட்டியதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் இன்று சாக்சி பச்சை நிற உடையை அணிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று சாக்சி உள்பட மூன்று சிறப்பு விருந்தினர்களும் வெளியேறி உள்ளார்கள் என்பதும் புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

இந்தியாவின் பெருமையை உயர்த்திய விவசாயி மகன்: இஸ்ரோ சிவன் குறித்து பிரபல நடிகை

இஸ்ரோவின் தலைவரும் தமிழருமான சிவன் அவர்கள் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2, இன்று அதிகாலை நிலவை நெருங்கிய

வெற்றி முக்கியம் தான், ஆனால்.. பிக்பாஸ் கமல் எச்சரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களின் தியாக மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வெற்றியை நோக்கிய பயணம் கொஞ்சம் தீவிரமாகியுள்ளது.

நமீதாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்: வைரலாகும் புகைப்படங்கள்

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்த நடிகை நமிதா, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்

இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நேற்று திட்டமிட்டபடி நிலவை நெருங்கி அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி

அருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்!

இந்த ஆண்டு அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது 'அக்னி சிறகுகள்', 'பாக்ஸர்' மற்றும் 'மாஃபியா' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.