கண்ணீரில் கவின், சீறும் சாண்டி, கம்பி எண்ணும் கஸ்தூரி! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் வீட்டில் கடந்த 50 நாட்களாக சின்ன சின்ன சண்டைகளுடன் சென்று கொண்டிருந்தாலும், அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் கஸ்தூரி, வனிதா வருகைக்கு பின் பிக்பாஸ் வீட்டில் ஜாலி என்பதே சுத்தமாக இல்லாமல் முழுக்க முழுக்க சண்டை, கண்ணீர் என மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய முதல் இரண்டு புரமோவில் திடீரென மதுமிதா பொங்கியதும், அதற்கு ஆண் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது வீடியோவில் கவின் கண்ணீர் வடிக்கின்றார். ஒரே ஒரு வார்த்தை பேசியதில் எங்கிருந்து அடிமைத்தனம் வந்தது என எனக்கு புரியவில்லை என கவின் கண்ணீர் வடிக்க அவருக்கு சாண்டி ஆறுதல் கூறுகிறார்.

மதுமிதாவுக்கு அடிபட்டு விடும் என்பதற்காக கேப்டன் டாஸ்க்கில் நாங்கள் விட்டுக்கொடுத்தோம். அப்போதெல்லாம் தெரியாத அடிமைத்தனம் இப்போது எப்படி வந்தது? என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார் சாண்டி. இதனையெல்லாம் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டே அமைதியாக கஸ்தூரி கவனித்து வருகின்றார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் வாரமே ஜெயிலில் அடைக்கப்படும் அளவுக்கு கஸ்தூரி என்ன செய்தார்? என்று தெரியவில்லை. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் பல அதிரடி திருப்பங்களும், கண்ணீர்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

கமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே அருணாச்சலம் என்பவர் பொதுச்செயலாளராக இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பேர்கள் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

'மாநாடு'க்கு பதில் 'மகா மாநாடு': சிம்புவின் அதிரடி முடிவு

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் திட்டமிட்டிருந்த 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஒருவழியா சண்டையில் கலந்து கொண்ட லாஸ்லியா: மதுமிதாவுக்கு இது தேவையா?

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென ஆவேசம் அடைந்து ஆண்கள் பெண்களை அடக்குவதாகவும், ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதாகவும்

கிருஷ்ணர், அர்ஜுனர் பேச்சு இப்போது தேவையா? ரஜினியை மறைமுகமாக விமர்சித்த பாடலாசிரியர்!

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர், அர்ஜுனர் என ரஜினிகாந்த் ஒப்பீடு செய்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுசா வந்திருக்கே ஒரு காக்கா... கஸ்தூரியை கலாய்த்த கவின்! 

வனிதாவின் வருகை பிக்பாஸ் வீட்டில் ஒரு புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது போலவே நேற்று வனிதாவின் நாரதர் வேலையால் முகின் -அபிராமி பிரச்சனை எரிமலையாக வெடித்தது