என்னை 8 பேர் சேர்ந்து 'கேங் ராக்கிங்' செய்தார்கள்: மதுமிதா பேட்டி

  • IndiaGlitz, [Monday,September 09 2019]

பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா, இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை கூறி வந்த நிலையில் என்னுடைய சமூக கருத்தாக, 'வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரோ..? மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீரை தர மறுக்கிறார் என்ற ஒருவரிக் கவிதையை கூறினேன். ஆனால் இதனை அரசியலாக்கி வேறு கோணத்தில் கொண்டுசென்று என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார்கள். இதில் எங்கே அரசியல் இருக்கின்றது என்பது எனக்கு புரியவில்லை.


நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாத நிலைக்கு என்னை அங்கிருந்த சிலர் கொண்டு சென்றுவிட்டனர். நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது நம்மூரை சேர்ந்தவர்களும் சேர்ந்து என்னை கேங் ராக்கிங் செய்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக இருந்ததால் எனக்கு கிடைத்த பரிசுதான் நான் வெளியேற்றப்பட்டது.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர வேண்டும் என்று தினமும் கடவுளை வேண்டும். அவ்வாறே எனது வேண்டுதலை கவிதை வடிவில் தெரிவித்தேன். அதில் அரசியல் எதுவும் இல்லை. பிக்பாஸ் வீட்டில் அரசியல் பேசக்கூடாது என்று எனக்கு குறிப்பு வந்தவுடன் 8 பேர் சேர்ந்து என்னை கேலியும் கிண்டலும் செய்தனர். அவர்களது கேலியையும் கிண்டலையும் பொறுக்க முடியாமல் தான் கையை அறுத்து கொண்டேன். எனக்கு ஆறுதலாக இருந்தது சேரனும் கஸ்தூரியும் தான்.

எனக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் பலர் அரசியல் பேசியுள்ளார்கள். ஏன் கமல் சாரே பிக்பாஸ் மேடையை பலமுறை அரசியலுக்கு பயன்படுத்தினார். ஆனால் அப்போதெல்லாம் அரசியல் பேசக்கூடாது என்று பிக்பாஸிடம் இருந்து குறிப்பு வரவில்லை. நான் பேசியது அரசியலே அல்ல, அவ்வாறு இருக்கும் போது எனக்கு அனுப்பிய குறிப்பை ஏன் மற்றவர்களுக்கு அனுப்பவில்லை என்பதே எனது கேள்வி' என்றும் மதுமிதா கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 

More News

ரொம்ப ஆட்றாங்க, என்னால சும்மா இருக்க முடியாது: வனிதா ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேசன் படலம் நடக்கும் என்பது தெரிந்ததே. கடந்த மூன்று வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பி வந்த வனிதாவை, இந்த வாரம் 'வி ஆர் பாய்ஸ்' வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்த்ததே

திருமணமான 5வது நாளில் விபத்தில் பலியான புதுப்பெண்; பிணத்தை கட்டிபிடித்து கதறிய கணவன்!

வேலூர் மாவட்டத்தில் திருமணமான ஐந்தாவது நாளே விபத்தில் பலியான மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது

ஒருமையில் கேள்வி கேட்ட ரசிகருக்கு பார்த்திபனின் கண்ணியமான பதில்!

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் இந்த டிரைலருக்கு பின் படத்தை அதிகளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

கேப்டன் டாஸ்க்: தர்ஷன் விட்டுக்கொடுக்க வனிதா காரணமா?

கடந்த இரண்டு நாட்களாக தன்னையும் ஷெரினையும் தவறாக இணைத்து வதந்தி பரப்பி வந்த வனிதா மீது கடும் கோபத்தில் தர்ஷன் இருந்தார். மேலும் உன்னுடைய நண்பர்கள் விட்டுக்கொடுத்து

நான் தியாகத்தில விட்டுக்கொடுக்கலை: லாஸ்லியாவுக்கு தர்ஷன் விளக்கம்

கேப்டன் டாஸ்க்கில் தன்னால் தொடர முடியவில்லை என்ற நிலை வந்தவுடன் உண்மையை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தான் விட்டுக்கொடுப்பதாக வனிதா டாஸ்க்கில் இருந்து வெளியேறினார்