close
Choose your channels

கேப்டன் டாஸ்க்: தர்ஷன் விட்டுக்கொடுக்க வனிதா காரணமா?

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களாக தன்னையும் ஷெரினையும் தவறாக இணைத்து வதந்தி பரப்பி வந்த வனிதா மீது கடும் கோபத்தில் தர்ஷன் இருந்தார். மேலும் உன்னுடைய நண்பர்கள் விட்டுக்கொடுத்து கிடைக்கும் வெற்றி தேவையா? என்று தர்ஷனை அவர் குத்திக்காட்டியுள்ளார்.

இதனால் வனிதா மீது கடும் அதிருப்தியில் இருந்த தர்ஷன், தன்னுடைய திறமையை நிரூபிக்க கேப்டன் டாஸ்க்கை பயன்படுத்த அவர் முடிவு செய்திருந்தார். வனிதாவை கேப்டன் டாஸ்க்கில் வென்று கேப்டன் பதவியை கைப்பற்றினால் தன்னுடைய திறமையை வனிதா புரிந்து கொள்வார் என்பது தர்ஷனின் எண்ணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாத வனிதா, 'விட்டுக்கொடுப்பதாக' அறிவித்தவுடன், வனிதா விட்டுக்கொடுத்து கேப்டன் பதவியை பெற வேண்டும் என்ற அவசியமில்லை என்ற ஈகோ காரணமாக தர்ஷனும் போட்டியில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் பலருக்கு லாஸ்லியாவுக்காக தர்ஷன், விட்டுக்கொடுத்ததாக தெரிகிறது.

உண்மையில் தர்ஷனுக்கு வனிதா மட்டுமே குறியாய் இருந்துள்ளார். லாஸ்லியாவை ஜெயிப்பது தர்ஷனுக்கு ஒரு மேட்டரே இல்லை. வனிதா விட்டுக்கொடுத்த பதவியை பெற விரும்பாத தர்ஷன், லாஸ்லியாவுக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம் என்றும் இது தியாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.