close
Choose your channels

ஒரே வார்த்தையில் ஷெரினை வெட்கப்பட வைத்த தர்ஷன்!

Thursday, September 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்குகள் அனைத்தும் போட்டியாளர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த வாரத்தில் அதிக புள்ளிகள் எடுப்பவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதால் போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு அதிக புள்ளிகள் எடுக்க தீவிரமாக விளையாடி வருகின்றனர். இருப்பினும் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் இடையிடையே போட்டிகளில் இருந்து கவனம் சிதறுவதாக் தெரிகிறது

குறிப்பாக போட்டியின் இடையில் லாஸ்லியாவுக்கு காயம் ஏற்பட்டால் கவின் உடனே துடித்து அவருக்கு ஆறுதலாக இருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இன்றைய டாஸ்க்கில் லாஸ்லியாவிடம் கவின் அவ்வப்போது டாஸ்குகள் இடையே பேசிக் கொண்டிருப்பது ஷெரினை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. இவர்கள் இங்கே டாஸ்குகள் விளையாட வந்திருக்கின்றார்களா? அல்லது வேறு எதற்கும் வந்திருக்கின்றார்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்.

மேலும் தர்ஷனிடம் தனிமையில், ‘எல்லோருமே அடி வாங்கிக் கொண்டுதான் டாஸ்குகளை விளையாடி வருகிறோம். இவர்கள் மட்டும் அடிவாங்குவது போல் பில்டப் செய்கிறார்கள் என்று கூற அதற்கு தர்ஷன் கூறும் ஒரே வார்த்தையில் ஷெரின் கோபமும் ஆவேசமும் அடங்குகிறது. ’ஒரு அழகான பொண்ணு கோபப்படலாமா? என்பதுதான் ஷெரினை பார்த்து தர்ஷன் கூறியது. இதனை கேட்டது ஷெரின் முகத்தில் கோபம் மாயமாய் மறைந்து திடீரென வெட்கமும் புன்சிரிப்பும் வருகிறது. தர்ஷனின் இந்த அணுகுமுறையே அவர் இந்த போட்டியில் டைட்டில் வெல்ல தகுதியானவர் என்பதை குறிப்பிடுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.