close
Choose your channels

தந்தையை கவனிக்க தவறிவிட்டேன்: குற்ற உணர்ச்சியால் கதறியழுத கண்டஸ்டண்ட்!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100-வது நாளை எட்டியுள்ளது என்பதும் இன்னும் 4 நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஷிவானி, சுரேஷ் மற்றும் அனிதா தவிர மீதி அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆன ரேகா உணர்ச்சிவசப்பட்டு தனது தந்தை குறித்து பேசி கதறி அழுத காட்சிகள் இன்றைய மூன்றாம் புரமோ வீடியோவில் உள்ளது. நீங்கள் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் நான் ஒரு விஷயத்தை கூறவில்லை. குறிப்பாக எனது அப்பாவை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன். நான் நடிகையாக பிசியாக இருந்த காலத்தில் எனது அம்மா என் கூடவே வந்து இருந்தார்கள். அப்பாவை கவனிக்க ஆளில்லாமல் இருந்தது. அதனால் அவர் உடல் நலக்கோளாறு காரணமாக இறந்துவிட்டார். நான் அவரை சரியாக கவனிக்காததால் தான் அவர் இறந்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்றும் உள்ளது என்று கதறி அழுதவாறு கூறினார்.

அபோது பாலாஜி உள்பட மற்ற அனைத்து போட்டியாளர்களும் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் காட்சிகள் என்ற மூன்றாவது புரமோவில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment