ரியோவுக்கும் பத்திக்கொண்ட பாலா பத்த வெச்ச நெருப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று முன் வெளியான மூன்றாவது வீடியோவில் ரியோ மற்றும் ஆரி வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ’இதற்கு முன்னர் என்னை கூப்பிட்டு நீங்கள் எத்தனை விஷயங்கள் சொல்லி இருக்கின்றீர்கள்? என் மேல் உள்ள அக்கறையால் நீங்கள் சொல்கிறீர்கள் என்று மதித்து நான் அதை ஏற்றுக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நான் உங்களிடம் கூறிய அக்கறையான ஒரு விஷயத்தை கூட நீங்கள் ஏற்றுக் கொண்டது கிடையாது என்று ரியோ ஆரி மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.

அதற்கு ஆரி, நீங்கள் கூறும் குற்றச்சாட்டு சரியாக இருந்தால் நான் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன் என்று கூற அதற்கு ரியோ, ’ஒரு தவறை சுட்டிக்காட்டினால் அந்த தவறை ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும் என்று கூற, உடனே பேச்சை மாற்றிய, நீங்கள் இதேபோன்று கூறி தான் அனிதாவை வெளியேற்றினீர்கள்’ என்று தெரிவிக்கிறார்.

அதனை மறுத்த ரியோ, ‘உங்களை ஒன்று கூறினால் அவர்களை ஏன் கூறவில்லை? என்று தான் கேட்கின்றீர்கள் தவிர, உங்களுக்கு நான் சொல்வதை ஏற்றுக் கொள்கிற மனசு உங்களிடம் ஏன் இல்லை என்று கேட்கிறார். உங்களிடம் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்று ரியோ அடித்துக் கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது.

இன்றைய முதல் மற்றும் இரண்டாவது புரமோவில் ஆரிக்கு எதிராக பாலா பற்ற வைத்த நெருப்பு தற்போது ரியோவுக்கு பற்றிக் கொண்டது என்பதும் போக போக இனி யார் யாருக்கெல்லாம் பற்றப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில் ஆரிக்கு வெளியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை அனைத்து போட்டியாளர்களும் உறவினர்களின் வருகையின் மூலம் புரிந்துகொண்டு அவரை ஒட்டுமொத்தமாக டார்கெட் செய்கிறார்களோ? என்ற எண்ணம் தான் தற்போது ஏற்படுகிறது. இது ஆரிக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து வீடியோவை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

யப்பா என்னா கோபம்? பழைய பன்னீர்செல்வமாக மாறிய பாலா!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்த நிலையில் இந்த வாரம் பெஸ்ட் பெர்மார்மர் ஆக ஆரி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது,

சென்னையில் உதவி இயக்குனர் குத்தி கொலை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த பயங்கரம்!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உதவி இயக்குனர்கள் இருவர் இடையே நடந்த மோதல் காரணமாக அதில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆரி டைட்டில் வின்னரா? பயத்துடன் பாலாஜி கூறியது இதுதான்!

பிக்பாஸ் வீட்டில் உறவினர்களின் வருகை குறித்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் குறித்து பாலாஜி ஆஜித்துடனும் ஷிவானியுடனும் பேசும் காட்சிகள் நேற்றைய எபிசோடில்

இனிமே பொறுத்துக்க முடியாது: அப்ப பாலா தான் அடுத்த வார டார்கெட்டா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இறுதி வாரத்துக்கு ஒரு வாரம் மட்டுமே இடைவெளி உள்ளது. இந்த நிலையில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது