close
Choose your channels

யப்பா என்னா கோபம்? பழைய பன்னீர்செல்வமாக மாறிய பாலா!

Friday, January 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்த நிலையில் இந்த வாரம் பெஸ்ட் பெர்மார்மர் ஆக ஆரி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது, டாஸ்க் என்றாலும் சரி மற்ற வேலைகளையும் ஆரி சிறப்பாக செய்ததாகவே அனைவரும் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜி மற்றும் ஆரி ஆகிய இருவரும் மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காட்சிகள் இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், சிறையில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளும் அதைவிட அதிர்ச்சியாக உள்ளது.

இந்த வயசுல குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதில்லை, வேலை செய்ய சொன்னால் அதற்கு சோம்பேறித்தனம் படும் நீ என்னை சொல்கிறாயா? என்று ஆரி கேட்க அதற்கு ஆத்திரத்துடன் பாலாஜி, ஏற்கனவே கூட்டிய இடத்தை கூட்ட முடியாது முடியாது முடியாது, சோம்பேறி என்று இன்னொரு தடவை சொன்னால்.... என்று ஆத்திரமாக கூறினார்.

அப்போது ஆரி உன்னைவிட என்னால் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியும், என்கூட வர்றியா? என கேட்டபோது ’ஒரு இடத்தில் கூட பொய் சொல்லாமல் நாணயஸ்தனாக விளையாடி உள்ளேன் என்றும் நான் உங்களை போல் பிளேம் பண்ணி விளையாடும் ஆள் இல்லை என்றும் நான் போட்ட உழைப்பு எனக்கு தான் தெரியும் என்றும் இந்த வீட்டில் யாருமே சோம்பேறி கிடையாது என்றும் எல்லோருமே உழைப்பை சிந்தி கொண்டு இருக்கின்றோம் என்று ஆத்திரமாக கூறுகிறார்.

இந்த வாரம் பாலாஜியின் சகோதரர் வந்தபோது ’உன்னை பழைய பாலாவாக நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறியதை அடுத்து பாலாஜி ’என்னை பழைய பன்னீர்செல்வமா பார்க்கவேண்டும் என விரும்புகிறாய், கூடிய சீக்கிரம் பார்ப்பாய்’ என்று பதில் கூறினார். பாலாஜியின் இந்த கோபத்தை பார்க்கும்போது அந்த உரையாடல் தான் ஞாபகம் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.