close
Choose your channels

இனிமே பொறுத்துக்க முடியாது: அப்ப பாலா தான் அடுத்த வார டார்கெட்டா?

Friday, January 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இறுதி வாரத்துக்கு ஒரு வாரம் மட்டுமே இடைவெளி உள்ளது. இந்த நிலையில் போட்டியாளர்கள் கடுமையாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம் போல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மோசமான மற்றும் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் தேர்வு செய்யப்படும் நிலையில் இன்று மோசமான பாலாவை ஆரி நாமினேட் செய்கிறார். பாலாஜி கேப்டனாக இருந்த போது நடந்த ஒரு விஷயத்தை கூற ஆரி முயலும் போதும், பாலாஜி ’இந்த வாரத்தை மட்டும் பேசுங்கள், போனவாரம் கேப்டன் ஆக நான் இருந்தபோது நடந்ததை இப்போது இழுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்க, அதற்கு ஆரி, ‘ நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை நீ சொல்ல தேவை இல்லை’ என்று பதிலளிக்கிறார்.

அப்போது திடீரென ’நீ வேண்டுமானாலும் வந்து சொல்றா’ என்று ஆரி கூறியதை அடுத்து ஆவேசமடைந்த பாலாஜி, ‘நீங்கள் ஒரு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அதை இதுவரை பொறுத்துகொண்டு இருந்தேன், இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது, வந்து சொல்றா என்றால் என்ன அர்த்தம்? என்று பாலாஜி கேட்க இருவருக்கும் இடையே மோதல் ஆவேசமாகிறது.

ஆரியிடம் மோதுபவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில் ஒருவேளை அடுத்த வாரம் பாலாஜி நாமினேஷனில் சிக்கினால் அவரது ரசிகர்களால் டார்கெட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்று ஆரி நடந்து கொண்ட விதம் குறித்து அவருக்கு எதிராகவும் ஒருசில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.