close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இன்று எண்ட்ரியாகும் பிரபலம்: பரபரப்பு தகவல்

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 27 நாட்கள் ஆகிவிட்டது என்பதும் இந்த 27 நாட்களில் ரேகா ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதும் அதற்கு பதிலாக அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைந்து உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வாரம் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளர் ஒருவர் வரவேற்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாடகி சுசித்ரா பிக்பாஸில் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரவிருப்பதாக தெரிகிறது

நாளை பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் பாடகி சுசித்ரா உள்ளே வரவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சுசித்ரா 25 நாட்கள் போட்டியை பார்த்துவிட்டு வருவதால் யார் யார் எப்படி என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய ஒருசில போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் சுசித்ராவின் வரவு நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.