close
Choose your channels

அபிஷேக் வைத்த அடைமொழி: எகிறிய இசைவாணி

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் இரண்டு புரமோவிலும் இடம்பிடித்த அபிஷேக் மூன்றாவது புரமோவிலும் அவர்தான் இடம் பிடித்துள்ளார். இன்றைய மூன்றாவது புரமோவில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி வைக்கிறேன் என்ற பெயரில் அபிஷேக் அடைமொழி வைக்க அது கடைசியில் விபரீதம் ஆகிவிடும் போல் தெரிகிறது.

இமான் அண்ணாச்சிக்கு அனாமத்து அண்ணாச்சி என்றும், பாவும் பாவனி என்றும், நெருப்பு நிரூப் என்றும், அசால்ட் அக்ஷரா என்றும், தலைவி தாமரை என்றும், வவ்வால் வருண் என்றும் அடைமொழி வைத்துக் கொண்டே வந்த அபிஷேக், ஒரு கட்டத்தில் இசைவாணியை இம்சை இசை என்று கூற இசைவாணி எகிரி குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு மத்தவங்கள பார்த்தா அப்படி இருக்குதா? என்ன பாத்தா உனக்கு ஏறுதா? என்று இசைவாணி எகிறி குதிக்க, அபிஷேக்கும் அதற்கு பதிலடி கொடுக்க இன்று இசைவாணிக்கும் அபிஷேகிற்க்கும் ஒரு சண்டை இருப்பது போல் தெரிகிறது.

மேலும் இன்றைய மூன்று புரமோவிலும் அபிஷேக் இடம்பிடித்திருப்பதை பார்க்கும்போது அவர்தான் கண்டெண்ட் கொடுக்கும் நபராகவும் மாறிவிட்டார் போல் தெரிகிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.