close
Choose your channels

அண்ணாச்சி பற்றி புறம் பேசி வசமாக சிக்கிய அபிஷேக்

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜயதசமி தினத்தில் பிக்பாஸ் வீட்டில் குழப்பம் ஒன்றை பிக்பாஸ் ஆரம்பித்த நிலையில் அதுகுறித்து பிரியங்கா விமர்சனம் செய்யும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இரண்டு வாரங்களில் சின்ன சின்ன சண்டைகள் தவிர போட்டியாளர்களுக்கு இடையே எந்த பெரிய பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்றைய விஜயதசமி தினத்தில் ஒரு குழப்பத்தை ஆரம்பிக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இந்த வீட்டில் சிறப்பாக பங்களிப்பு கொடுத்தவர் யார்? பங்களிப்பே இல்லாதவர் யார்? என்பதை தரம் பிரித்து பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்றும், பிக்பாஸால் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை செய்து இன்று மாலை நடைபெறும் திருவிழாவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பிக்பாஸ் அறிவிக்கின்றார்

இந்த அறிவிப்புக்கு பிரியங்கா தனது கருத்தை கூறியபோது ’விஜயதசமியன்று புதுசா கொளுத்தி போட்டுட்டியே டார்லிங், இதை கொஞ்சம் கூட நான் நினைச்சு எதிர்பாக்கலே என்று கூறுகிறார்

இந்த நிலையில் இமான் அண்ணாச்சி குறித்து அபிஷேக் கூறியபோது, ‘அவருடைய காமெடி எனக்கு கொஞ்சம் கூட எனக்கு ஒர்க் ஆகவில்லை. எல்லார்கிட்டயும் அவர் குழப்பத்தை உண்டாக்குகிறார் என்று அபிஷேக் தனது பங்கிற்கு கொளுத்தி போடுகிறார். மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொளுத்தி போடும் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் குழப்பங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.