close
Choose your channels

பிரியங்காவிடம் இருந்து தனது வேலையை தொடங்கும் அபிஷேக்!

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் என்பது தெரிந்தது. ஆனால் அபிஷேக் ரீஎண்ட்ரி ஆனதில் இருந்து எந்தவித புரமோவிலும் வராமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் தினமும் மூன்று புரமோவிலும் வந்துகொண்டிருந்த அபிஷேக் இந்த முறை அடக்கி வாசிப்பதாகவே நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வந்தனர்.

இந்த நிலையில் இன்று முதல் அபிஷேக் தனது வேலையை காட்டத் தொடங்கி விட்டதாக தெரிய வருகிறது. சற்றுமுன் வெளியான புரமோவில், ‘தாமரை என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் மத்தவங்க கிட்ட காட்டுற அன்பில் சில பேர்தான் உண்மையாக இருக்கிறார்கள் என்றும், சில பேரை விலைக்கு வாங்கி விடலாம் என்றும் கூறுகிறார். ஜால்ரா என்றும் கூறுகிறார். இந்த வாரத்திலாவது நீங்கள் உங்களுடைய வாய்ஸை காட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது’ என்று பிரியங்காவை பார்த்து அபிஷேக் கூறுகிறார்.

இதனை அடுத்து பிரியங்கா இதுகுறித்து விளக்கம் கூறும் போது, ‘தாமரை அல்லது யாருக்கோ புரூஃப் பண்ணுவதற்காக நான் இங்கு உட்காரவில்லை’ என்று கூற உடனே பிரியங்காவிடம் அபிஷேக், ‘எனக்கென்னங்க நீங்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று சொல்வதுடன் இன்றைய புரொமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் அபிஷேக் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் போல என்பதுதான் இன்றைய புரமோவில் இருந்து தெரியவருகிறது. இனி அடுத்தடுத்து அனைத்து புரமோவிலும் அவரது ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.