close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரியாகும் 'வாம்மா மின்னல்' நடிகை!

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரத்குமார் நடித்த ’மாயி’ என்ற திரைப்படம் கடந்த 2000ம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் வடிவேலு பெண் பார்க்க வரும் காட்சியில் ’வாம்மா மின்னல்’ என்று கூறும் போது மின்னல் வேகத்தில் வந்து செல்லும் நடிகையை யாராலும் மறந்திருக்க முடியாது. அவரது பெயர் தீபா.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை தீபா ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். சரத்குமார் நடித்த ’மாயி’ திரைப்படம் தனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தாலும் அதன் பிறகு வாய்ப்புகள் வரவில்லை என்றும் தற்போது சசிகுமாரின் ’ராஜ வம்சம்’ படத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் நடந்த ’ராஜ வம்சம்’ படத்தின் புரமோஷன் விழாவில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தனக்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று தனக்கு வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் கதிர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் கூறியுள்ளார்.

சசிகுமாரின் ’ராஜ வம்சம்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.