close
Choose your channels

நான் இதை சும்மாவிட மாட்டேன்: சண்டைக்கு வரிந்து கட்டும் நமீதா!

Friday, October 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதல் சண்டை யார் யாருக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரைச்செல்வி மற்றும் நமீதா இடையே சண்டை வரும் போல் தெரிகிறது. குழந்தை வளர்ப்பு குறித்து நமீதா கூறிய கருத்துக்கள் குறித்து தாமரைச்செல்வி விமர்சனம் செய்ய, அவரது ஸ்லாங் புரியாத நமீதா அவர் மீது கோபப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து ’உன்னுடைய ஸ்லாங் அவர்களுக்கு புரியவில்லை அதனால் வந்த பிரச்சனை தான் இது’ என இமான் அண்ணாச்சி கூற, அதற்கு ‘நான் அதற்கு அப்போதே மன்னிப்பு கேட்டு விட்டேன்’ என்று தாமரைச்செல்வி வழக்கம்போல் அப்பாவியாக கூறுகிறார்.

அப்போது அந்தப் பக்கமாக நமீதா வரும்போது, ‘நான் பேசி சரி செய்கிறேன் என்று கூறிய இமான் அண்ணாச்சி நமீதாவை அழைக்கிறார். ஆனால் நமீதாவோ, தயவு செய்து என்னை கோவித்து கொள்ளாதீங்க, நான் அங்கு வர மாட்டேன்’ என்று நமீதா கோபமாக செல்கிறார். இந்த புரமோவில் நமீதா, ‘நான் இதை விட மாட்டேன், இந்த வீட்ல பெரிய சண்டை வரப்போகுது என்று சொல்வதை பார்க்கும்போது இன்றைய நிகழ்ச்சியில் நமீதா - தாமரைச்செல்வி இடையே சண்டை வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.