close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது வாரமே குரூப்: பாவனி ரெட்டி

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் முதல் சீசனில் இருந்து குரூப் உண்டாகி இருக்கிறது என்பதையும் குறிப்பாக கடந்த சீசனில் அன்பு குருப் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலும் தற்போது குரூப் ஆரம்பம் ஆகி விட்டதாக பாவனி ரெட்டி ஆதங்கத்துடன் தெரிவித்த காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளன. பாவனி ரெட்டி, ஐக்கி மற்றும் இசைவாணி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘எனக்கு சில குரூப் இங்கே உண்டாகி இருப்பதாக மனதில் தெரிகிறது. நான் போய் உட்கார்ந்து பேசும்போது என்னை தவிர்த்துவிட்டு வேறு டாப்பிக் பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே நன்றாக தெரிகிறது இங்கே குரூப் உண்டாகி விட்டது என்று கூறுகிறார்.

இதனை அடுத்து இமான் அண்ணாச்சி ஒரு குரூப் என்றும், அக்ஷரா ஒரு குரூப் என்றும் உண்டாகியிருக்கலாம் என்று ஐக்கியும் அதனை ஆமோதிக்கின்றார். ஆக மொத்தத்தில் இரண்டாவது வாரமே பிக்பாஸ் வீட்டில் குருப் உண்டாகி விட்டதாக தெரிகிறது. இனி போகப்போக இந்த குரூப்புக்கு இடையே பிரச்சனை வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.