close
Choose your channels

இவர்கள் தான் உயர்வானவர்கள்: ஆரியே விரும்பி எடுத்து கொண்ட புகைப்படம்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரி, அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவ்வப்போது ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது அவர் தனக்குப் பிடித்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியபோது ’நான் விரும்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. குப்பை போடுபவர்களை விட அதை சுத்தம் செய்பவர்களை உயர்வானவர்கள். இதை கொரோனா காலத்தில் உலகிற்கு உணர்த்திய உங்களது சேவை மகத்தானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இணையாக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை செய்து கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தி உள்ள ஆரிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.