வனிதா மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டும் போட்டியாளர்கள்: கமல் ஆச்சரியம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கேப்டனாக இருந்த வனிதாவை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கமல்ஹாசனிடம் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் வனிதா சர்ச்சைக்குரிய வகையில் தான் கேப்டன் டாஸ்க்கில் வெற்றிபெற்றார். அதன்பின் அவரது தாக்கம் அதிகம் இருந்ததை பார்வையாளர்களால் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் வனிதாவின் கேப்டன்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று சக போட்டியாளர்களிடம் கேட்டபோது கிட்டத்தட்ட அனைவருமே வனிதாவுக்கு மதிப்பெண் அளிக்க மறுத்துவிட்டனர்.

வனிதா குறித்து சினேகன் பேசும் போது, ‘அவர் பேசும்போது இன்னொருவர் பேசுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறினார். பாலாஜி முருகதாஸ் கூறியபோது, ‘அவருக்கு மதிப்பெண் போடுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறினார். ’வனிதா கேப்டனாக இருக்கும் வாரத்தில் எப்படி இந்த வீட்டில் இருப்பது என்றே தெரியவில்லை’ என்று அபிராமி வெங்கடாச்சலம் கூறினார்.

தாமரை கூறிய போது ’ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்ற ஒரு அடிப்படை கூட அவர்களுடைய பேச்சில் இல்லை’ என்று கூறினார். நிரூப் பேசும் போது, ‘ஒரு கேமை எப்படி கெடுப்பது என்பதையே ஒரு கேம் ஆக அவர்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று கூறினார்.

’வனிதா தன்னுடைய கேப்டன் பொறுப்புகளில் எதுவும் செய்யாது மாதிரி எனக்கு தோன்றுகிறது’ என்று ஜூலி கூறினார். ’அவரை பற்றி பாசிட்டிவ்வாக சொல்ல எதுவுமே இல்லை’ என ஸ்ருதி கூறினார். ’வனிதாவுக்கு மார்க் போடுவதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை’ என்று ஷாரிக் கூறினார்

அபினய், அனிதா மற்றும் தாடி பாலாஜி தவிர அனைவருமே வனிதாவை குற்றம்சாட்டியது கமல்ஹாசனை பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பதும் தன்னை குற்றஞ்சாட்டி சக போட்டியாளர்கள் பேசும்போது வனிதா ஒரு புன்முறுவலுடன் அமைதியாக உட்கார்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

முட்டாள்கள் தினத்தில் ரிலீஸ் ஆகும் 'இடியட்'

உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் என கொண்டாடப்படும் ஏப்ரல் 1ஆம் தேதி 'இடியட்'என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரபு நாட்டில் இருந்து 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனம் ஆடிய பிரபலம்!

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து

சென்னையில் நடந்த செம டின்னர்: போனிகபூருடன் கலந்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?

போனிகபூர் தயாரித்த அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது புரமோஷனுக்காக சென்னை வந்துள்ள போனிகபூர் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட டின்னர்

நீர்வீழ்ச்சி அருகே நின்று வாழ்க்கை தத்துவத்தை கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 22 மில்லியன்

ஆக்சன்கிங் அர்ஜூன் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

ஆக்சன் கிங் அர்ஜுன் வீட்டில் நடந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.