close
Choose your channels

நீர்வீழ்ச்சி அருகே நின்று வாழ்க்கை தத்துவத்தை கூறிய சமந்தா: வைரல் புகைப்படங்கள்

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 22 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சமீபத்தில் சென்ற சமந்தா, கிளாமர் உடையில் அருவி அருகே நின்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக அவர் வாழ்க்கை தத்துவத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அவருடைய தத்துவத்திற்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் ’சாகுந்தலம்’ மற்றும் ’யசோதா’ ஆகிய படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் அவர் ’தி ஃபேமிலிமேன்’ தொடர் இயக்குனரின் அடுத்த வெப்தொடரிலும் ஹாலிவுட் வெப்தொடரிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.