close
Choose your channels

தமிழக அரசுக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் கடிதம்!

Wednesday, October 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் ரிலீசாக நாட்கணக்கில் காத்திருந்த நிலை மாறி தற்போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுவரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்காதது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் பிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தை பரிசீலனை செய்து பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் தீபாவளிக்கு வெளிவரும் இன்னொரு திரைப்படமான ‘கைதி’ படத்தின் குழுவினர்களும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.