close
Choose your channels

காணாமல் போன பிரபல நடிகர் மரப்பெட்டியில் சடலமாக மீட்பு… அதிர்ச்சி சம்பவம்!

Saturday, May 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பிரேசில் நிகழ்ச்சி ஒன்றில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்புபெற்ற நடிகர் ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் தற்போது மரப்பெட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் வசித்துவந்த நடிகர் ஜெபர்சன் மச்சாடோ கடந்த ஜனவரி 29 முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய தொலைபேசியில் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் அந்த செய்திகளில் எழுத்துப்பிழை அதிகமாக இருந்ததாகவும் அது என் மகனுடையதல்ல என்றும் அவரது தயார் மரியா தாஸ் டோரஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து 4 மாதங்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீசார் நடிகர் ஜெபர்சனின் உடலை அந்த நடிகருக்குச் சொந்தமான ரியோ தோட்டத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர். மரத்தடியில் 6.5 அடிக்கும் கீழே இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள அவரது உடல் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காணாமல் போன நடிகரை ரியோ தோட்டத்தில் வாடகைக்கு வந்த மற்றொரு நபர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல நடிகர் ஒருவரை கொலை செய்து அவருடைய தோட்டத்திலேயே மரத்தடிக்குக் கீழ் மரப்பெட்டியில் வைத்து புதைத்துள்ள இந்தச் சம்பவம் தற்போது பலரையும் பீதியடைய வைத்திருக்கிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.