close
Choose your channels

சீனாவில் கொரோனா பாதிப்பு: சென்னை வியாபாரிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!

Friday, February 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீனாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 1500க்கும் மேற்பட்ட சீனர்கள் பலியாகி உள்ளதாகவும், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனா மட்டுமின்றி சீனாவின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது மட்டுமன்றி தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது இதனால் சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கடந்த ஒரு மாதமாக ஏற்றுமதி ஆகவில்லை என கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட்டில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சீனாவில் இருந்து வரவேண்டிய சரக்குகள் வரவில்லை என்பதால் வியாபாரம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும் தற்போது இருக்கும் ஸ்டாக்குகளை வைத்து சமாளித்து வருவதாகவும் இன்னும் ஒரு மாதம் இதே நிலை நீடித்தால் அடுத்த மாதம் பெருமளவில் வியாபாரம் பாதிக்கும் என்றும் வியாபாரிகள் கூறி வருகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியாவிலேயே கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.