close
Choose your channels

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவிய மாணவர்கள் போராட்டம்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையே கொந்தளிக்க செய்துவிட்டதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுவடைந்து வருகிறது.

நேற்று ஓணம் காரணமாக ஒருசில கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மந்தமாக தொடங்கிய போராட்டம் இன்று சென்னை உள்பட மாநிலத்தின் பல கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் லயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை அறிவியல் கல்லூரி உள்பட ஒருசில கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

மேலும் சென்னை கல்லூரி மாணவர்களின் பேரணி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சென்னை மட்டுமின்றி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், - விழுப்புரம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் என போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. 

நீட் தேர்வை எதிர்த்து அனிதா பற்ற வைத்த தீ, கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் விரைவில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.