close
Choose your channels

வொர்க் ஃபிரம் ஹோமுக்காக சொந்த ஊர் வந்தவர் ஜெயிலுக்கு போன பரிதாபம்: கள்ளக்காதலியால் விபரீதம்

Friday, July 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையிலிருந்து வொர்க் ஃபிரம் ஹோமுக்காக சொந்த ஊர் வந்தவர் கள்ளக்காதலியால் பரிதாபமாக சிறைக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடலூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக அவர் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய சொந்த ஊருக்கு வந்து மனைவி ஷோபனா மற்றும் மகனுடன் சந்தோஷமாக பொழுதை கழித்து பணியும் செய்து கொண்டிருந்தார்

இந்த நிலையில் சென்னையில் விஜயகுமாருக்கு அனு என்ற கள்ளக்காதலி இருந்ததாக தெரிகிறது. அவ்வப்போது அனு விஜயகுமாருக்கு போன் செய்து பணம் தரும்படி நச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் விஜயகுமார் பணம் தரமுடியாது என்று கூறியதை அடுத்து விஜய்குமாரின் மனைவி ஷோபனாவிடம் தனக்கும் விஜயகுமாருக்கும் இருந்த தொடர்பு அனைத்தையும் அனு கூறி விட்டார்

இந்த நிலையில் திடீரென விஜயகுமாருக்கு வேலை பறிபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி உள்ளார். கணவன் தனக்கு செய்த துரோகம் மற்றும் வரதட்சிணை கொடுமை ஆகியவற்றால் விரக்தி அடைந்த ஷோபனா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் தன்னை தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கொடுமைப்படுத்தியதாகவும் தனது கணவருக்கு ஒரு கள்ளக்காதலி இருப்பதாகவும் விரிவாக வீடியோ மூலம் பதிவு செய்து அதை தனது உறவினருக்கு அனுப்பி உள்ளார்

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புகாரை அடுத்து காவல்துறையினர் ஷோபனாவின் கணவன், மாமனார், மாமியார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விஜயகுமாரின் கள்ளக்காதலி அனுவையும் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். வொர்க் ஃப்ரம் ஹோமுக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்த ஐடி ஊழியர் விஜயகுமார் தற்போது தாய் தந்தையுடன் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.