close
Choose your channels

சென்னை கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை: திடுக்கிடும் காரணம்!

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த தேசிய கபடி வீராங்கனை தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதனந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்த பானுமதி என்பவர் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார் .

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது பானுமதி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்ததில் பானுமதி தனது திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்பதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.