சென்னை இளைஞர்களை குறிவைக்கும் போதை ஸ்டாப்! கைது செய்யப்பட்டவர் வெளியிட்ட பகீர் தகவல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


சென்னையில் உள்ள பணக்கார இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்ப், மற்றும் பல்வேறு வடிவிலான போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு முகப்பேரில், உள்ள நீச்சல் குளத்தின் அருகே, போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார், அப்பகுதிக்கு மப்டியில் சென்று நோட்டமிட்டு வந்தனர். அப்போது நீச்சல் குளம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறு சில நிமிடம் நின்றார். பின் நீச்சல் குளத்தில் குளிக்க வந்த சில பணக்கார இளைஞர்கள், அவரை நோக்கி வந்து பணத்தை கொடுத்து ஸ்டாம்ப் போன்ற பொருளையும், கலர் கலராக பல்வேறு வடிவத்தில் இருந்த மாத்திரைகளையும் வாங்கி சென்றனர்.
பின்னர் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை, போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது... முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். துருவித் துருவி விசாரணை செய்ததில், தான் விற்பனை செய்தது போதைப் பொருள் என்று ஒப்புக்கொண்டார்.
அவரிடமிருந்து 5 எல்எஸ்டி ஸ்டாம்ப், 12.360 கிராம் கொண்ட 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள், 4.830 கிராம் ஹாஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஸ்டாம்ப் வடிவில் இருக்கும் பேப்பர் நாக்கில் வைத்தால் அதிக அளவு போதை தரும் என்றும் கூறியுள்ளனர்.
விசாரணையில், இந்த இளைஞர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரவணன் (23 ) என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்துள்ள போலீசார், இவருக்கு இந்த போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்ப் எப்படி வந்தது, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments