close
Choose your channels

தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு: நடிகர் சிம்பு மீதான வழக்கு ரத்து!

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் எனவே அந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவின் பீப் பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் சிம்புவுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்த நிலையில் அந்த வழக்கையும் ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் இந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.