close
Choose your channels

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தொடர்ந்து பதவியில் இருந்தால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் என திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த தேர்தல் ஆணையம் சற்றுமுன்னர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது.
ஜார்ஜ் அவர்களுக்கு பதிலாக சென்னை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக கரன் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரன் சின்ஹா சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.