close
Choose your channels

பேய்க்கு விழுந்த பிரம்படியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!!

Saturday, December 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேய்க்கு விழுந்த பிரம்படியால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!!

 

கடந்த மே மாதம் பேய் பிடித்ததாகச் சொல்லப்பட்ட சென்னை இளைஞரின் மரணத்தில் புது திருப்பமாக அவரின் பிரேதச பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் உள் இரத்தக்காயம் ஏற்பட்டதால் இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் மகபூப் பாஷா-ஆயிஷா தம்பதியினர். கடந்த மே மாதத்தில் மகபூப் திடீரென்று பேய் பிடித்ததாக நடித்து உள்ளார். இதையடுத்து அவரது மனைவி ஆயிஷா ஸ்டான்லி பகுதியில் உள்ள தர்காவிற்கு அழைத்துச் சென்று பேய் ஓட்டி இருக்கிறார். இருந்தும் அவரது மனக்கோளாறு சரியாகவில்லை என்று உறவினர்களிடம் ஆயிஷா புலம்பி இருக்கிறார்.

அப்போது உறவினர்கள் பொத்தூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் பூசாரி சங்கர் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர் என்று கூறி இருக்கின்றனர். இதையடுத்து ஆயிஷா மகபூப்பை சங்கரிடம் அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். உடனே இதற்கு விடையளித்த சங்கர், 10 நாட்களுக்கு சிறப்பு பூஜை செய்து பேயை ஓட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதனால் சங்கர் மகபூப்பை ஒரு வாரத்திற்கும் மேலாக கட்டி வைத்து பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜுன் 9 ஆம் தேதி மெகபூப்பிற்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மயங்கி விழுந்த அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் ஆயிஷா. அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் திடீரென்று உயிரிழந்ததால் சந்தேகம் அடைந்த ஸ்டான்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வெளியான பிரேச பரிசோதனை அறிக்கையில் சாமியார் அடித்ததால்தான் மகபூப் உயிரிழந்தார் என்ற தகவல் கூறப்பட்டு உள்ளது. இதனால் சங்கரை போலீசார் கைது செய்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.