காதலர் தினத்தில் நாய்க்கு தாலி கட்டிய வாலிபர் கைது!!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் வரும்போது சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஒருசில அமைப்புகள் காதலர்களை பிடித்து வைத்து அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வரும் கொடூரம் இன்னும் வட இந்தியாவில் அதிகம் நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னை கொருக்குப்பேட்டையில் வாலிபர் ஒருவர் காதலர் தினத்திற்கு எதிராக இன்று நடுத்தெருவில் நின்று கோஷம் போட்டு கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபர் நாய்க்கு தாலி கட்டினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். நடுத்தெருவில் வாலிபர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விவகாரம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.