துப்பறிவாளராக ரீஎண்ட்ரி ஆகும் தேசிய விருது பட இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,February 11 2018]

நடிகர், இயக்குனர் சேரன், 'சென்னையில் ஒரு நாள் மற்றும் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களுக்கு பின்னர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்த 'மழை' படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சேரன் ஒப்பந்தமாகியுள்ளார். ரீஎண்ட்ரிக்காக நல்லதொரு கேரக்டருக்காக தான் காத்திருந்ததாகவும், ராஜ்குமார் கூறிய இந்த கேரக்டர் தனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த கேரக்டர் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சேரன் இந்த படம் குறித்து கூறியுள்ளார்.

த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஒரு வழக்கை விசாரணை செய்யும் துப்பறியும் அதிகாரியாக சேரன் இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த கேரக்டர் தனக்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கித்தரும் என்று தான் நம்புவதாகவும் சேரன் கூறியுள்ளார்.

More News

ரஜினியின் நோக்கம் குறித்து ஹார்வர்டு பல்கலையில் பேசிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை முறைப்படி கட்சி ஆரம்பித்து தொடங்கவுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு

கமல் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்று பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று அவர் புதிய இணையதளம் ஒன்றை 'நாளை நமதே' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார்.

கலாச்சாரத்திற்கு எதிரானது: பாகிஸ்தானில் அக்சயகுமார் படத்திற்கு தடை

பெண்களுக்கு நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமான 'பேட்மேன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

கட்சி ஆரம்பிக்கும் முன் கமல் சந்திக்கும் பிரபல தலைவர் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சளைக்காமல் மோதிய மகேஷ்பாபு ரசிகர்கள்

விஜய், அஜித் ரசிகர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தற்போது நிரூபித்துள்ளனர்.