close
Choose your channels

துப்பறிவாளராக ரீஎண்ட்ரி ஆகும் தேசிய விருது பட இயக்குனர்

Sunday, February 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துப்பறிவாளராக ரீஎண்ட்ரி ஆகும் தேசிய விருது பட இயக்குனர்

நடிகர், இயக்குனர் சேரன், 'சென்னையில் ஒரு நாள் மற்றும் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களுக்கு பின்னர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்த 'மழை' படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சேரன் ஒப்பந்தமாகியுள்ளார். ரீஎண்ட்ரிக்காக நல்லதொரு கேரக்டருக்காக தான் காத்திருந்ததாகவும், ராஜ்குமார் கூறிய இந்த கேரக்டர் தனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த கேரக்டர் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சேரன் இந்த படம் குறித்து கூறியுள்ளார்.

த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஒரு வழக்கை விசாரணை செய்யும் துப்பறியும் அதிகாரியாக சேரன் இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த கேரக்டர் தனக்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கித்தரும் என்று தான் நம்புவதாகவும் சேரன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.