இவர்கள் தாய்ப்பால் குடித்தார்களா? இல்லையா? நயன்தாராவை கேலி செய்தவர்களுக்கு சின்மயி கேள்வி!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ’கனெக்ட்’ என்ற திரைப்படத்திற்கு நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்த நிலையில் அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆனது.
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த சிலர் நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கமெண்ட் செய்தனர். இந்த கமெண்ட்ஸ்களுக்கு பாடகி சின்மயி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘ இந்த மாதிரி கமெண்ட் செய்த ஆண்கள் எல்லாம் தாய்ப்பால் குடித்தார்களா? இல்லையா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இந்த ஆண்களுக்கு எல்லாம் மகள்கள் இருந்தால் என்ன நடக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.
பல தாய்மார்கள் தங்கள் மகள், கணவர் மற்றும் மகன் முன் கூட துப்பட்டா அணியவே விரும்புவார். ஆனால் ஆண்கள் சிலர் தங்கள் சொந்த மகள் சகோதரியாக இருந்தால் கூட அவர்களுடன் உறவு கொள்வார்கள் என்பதை பார்த்து வருகிறோம்’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவரது விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments