close
Choose your channels

ஒரே வாகனத்தில் வாக்குசேகரிக்கும் ஓபிஎஸ்… இபிஎஸ்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா???

Tuesday, January 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே வாகனத்தில் வாக்குசேகரிக்கும் ஓபிஎஸ்… இபிஎஸ்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா???

 

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் அதிகமுக தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தப் பிரச்சாரப் பணிகளில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஓரங்கட்டப்படுவதாகச் சில சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே வாகனத்தில் நின்றபடியே வாக்குச் சேகரித்து உள்ளனர். இந்தக் காட்சி, கட்சி உறுப்பினர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இதனால் கட்சிக்குள் இருக்கும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் சில விமர்சனக் கருத்து முன்வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு விமானம் மூலம் சென்ற முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் அருகே உள் சேரன்மாதேவி செல்வதற்கு தயாராக இருந்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகிய இருவரும் அங்கிருந்து 70 கி.மீ வரை ஒரே வாகனத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் ஒரே வாகனத்தில் நின்றபடியே இருவரும் வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்தக்காட்சி கட்சி மட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றதோடு அனைத்துச் சலசலப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.