close
Choose your channels

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Tuesday, April 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவருக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்  சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை முடிந்து இன்று டிச்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சிகிச்சையின் போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும் அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட தமிழக முதல்வர் இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து 3 நாட்களுக்கு வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment