கோவை மாணவி கடிதத்தில் உள்ள மற்ற இருவர் யார்? பெற்றோர் கூறிய உண்மை!

  • IndiaGlitz, [Tuesday,November 16 2021]

கோவையைச் சேர்ந்த பொன்தாரிணி என்ற மாணவி ஆசிரியரின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மிதுன் மற்றும் மீரா ஜாக்சன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கோவை மாணவி பொன்தாரிணி கடிதத்தில் ரீடாவோட தாத்தா மற்றும் எலிசா சாருவோட அப்பா என்றும் எழுதியிருந்தார் என்பதும், அவர்கள் இருவர் யார் என்பது குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் அவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன இந்த நிலையில் இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் விளக்கம் அளித்தபோது, ‘தனது மகளுக்கு பாலியல் தொல்லை அதிகமானதால் மனதளவில் பாதிக்கப்பட்டு அவர் என்ன எழுதுகிறோம் என்பதை தெரியாமல் எழுதி இருந்தார் என்றும் மிதுன் மற்றும் மீரா ஜாக்சன் ஆகியோர் பெயர்களை மட்டுமே அவர் சரியாக இருந்தார் என்றும் மற்ற இருவரின் பெயர்களை அவர் ஏன் எழுதுகிறோம் என்பதே தெரியாமல் எழுதி இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்கள். மேலும் அந்த இருவரும் தனது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொண்ட வயதானவர்கள் என்றும் சிறுவயதிலிருந்தே தங்களது மகளை அவர்களுக்கு தெரியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்

மேலும் தங்களுடைய மகள் மட்டுமின்றி மேலும் 17 மாணவிகள் அந்த ஆசிரியரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தங்கள் மகளின் மரணத்திற்கு பின்னரே அந்த மாணவிகள் தங்களிடம் கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

More News

தண்ணீர் டேங்கில் கலைவண்ணம்… கண்ணைப் பறிக்கும் வீடுகள்!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் பகுதியில் பெரும்பாலான வீடுகள் சில வித்தியாசமான தனித்துவத்தை கொண்டிருக்கின்றன.

நடிகர் சுஷாந்த்சிங் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் மரணம்: அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற பாலிவுட் நடிகர் கடந்த ஆண்டு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீச்சல் உடை புகைப்படம் வெளியிட்ட நடிகை அனுஷ்கா சர்மா… வைரல் பதிவு!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா.

தடுப்பூசி போட்டால் செக்ஸ் இலவசம்… அறிவிப்பை கேட்டு படையெடுக்கும் மக்கள்!

ஆஸ்திரேலிய தலைநகர் வியன்னாவில் உள்ள கிளப் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு “செக்ஸ் இலவசம்“

டிராவிட் பயிற்சியாளர் ஆனதற்கு இதுதான் காரணம்… உண்மையை உடைத்த கங்குலி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தி லெஜெண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார்.