close
Choose your channels

நடிகர் சுஷாந்த்சிங் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் மரணம்: அதிர்ச்சி தகவல்

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற பாலிவுட் நடிகர் கடந்த ஆண்டு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் எதிர்பாராதவகையில் விபத்தில் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங் என்பவரின் சகோதரி கீதா தேவி என்பவர் மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சுஷாந்த்சிங் ராஜ்புத் குடும்ப உறுப்பினர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று திடீரென மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பதும், கொல்லப்பட்டவர்களில் 5 பேர் நடிகர் சுஷாந்த் சிங்கின் நெருங்கிய உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்த ஐவரும் சுஷாந்த்சிங்கின் நேரடி குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் இறந்த அனைவருமே மிக நெருங்கிய உறவினர்கள் என்பதால் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.