close
Choose your channels

'மாநாடு' படத்திற்கு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அழைத்து சென்ற கலெக்டர்!

Monday, December 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படத்திற்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி அழைத்துச் சென்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பாக நேற்று பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இணைந்து ’மாநாடு’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.