பள்ளி மாணவியை காதலித்த கல்லூரி மாணவர்: காதலிக்காக செய்த கொலையால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,June 13 2020]

கல்லூரி மாணவர் ஒருவர் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவரை காதலித்த நிலையில் அந்த காதலிக்காக கொலை கொலை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் அவ்வப்போது தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர் தனது காதலியான பள்ளி மாணவியை ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று அங்கு பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிறுவன் ஒருவன் இந்த காதல் ஜோடியை பார்த்து விட்டதாகவும், கல்லூரி மாணவரின் காதலியான அந்த பள்ளி மாணவியின் பக்கத்தை வீட்டில்தான் அந்த சிறுவன் இருந்ததாகவும் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவி, தன்னுடைய காதலரிடம் அந்த சிறுவன் தன்னை தனது பெற்றோரிடம் காட்டி கொடுத்து விடுவான் என்று பயந்தபடியே கூறியுள்ளார். இதனை அடுத்து கல்லூரி மாணவர் அந்த சிறுவனை அழைத்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கத்தியால் குத்தி கொலை செய்து பிணத்தை புதரில் வீசி எறிந்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சிறுவன் காணாமல் அவனது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடிய போது சிறுவன் கழுத்தறுபட்டு புதரில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை செய்தபோது சிறுவனை கொலை செய்ததும் கல்லூரி மாணவர் என்றும் பள்ளி மாணவியை காதலித்ததால் இந்த கொலை நடந்தது என்றும் கண்டுபிடித்து, கல்லூரி மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More News

10ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: கணவர் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்ட சகோதரி கைது!

கணவரின் குடும்பத்தை பழிவாங்க 10ஆம் வகுப்பு படித்து வரும் தனது சகோதரியை தனது கணவரின் சகோதரருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக பெண்ணொருவர் காவல்துறை கொடுத்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சூர்யாவுக்காக ஒரே படத்தில் மூன்று பாடல்கள் பாடிய விஜய்!

தளபதி விஜய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகர், டான்சர் மட்டுமன்றி சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலாவது

11ஆம் தேதி மருத்துவர் குழு, 17ஆம் தேதி பிரதமர்: அடுத்தடுத்து ஆலோசனை செய்யும் முதல்வர்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த

'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என கூறினார்கள்: மாளவிகா மோகனன் அதிர்ச்சி தகவல்

தனக்கு மிகவும் நெருக்கமான பலர் 'பேட்ட' படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆனால் நான் அவர்களின் பேச்சைக் கேட்காமல் 'பேட்ட' படத்தில் நடித்ததாகவும் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 

சூப்பர் ஹிட் படத்தின் ஸ்கிரிப்டை 7 நாட்களில் எழுதி முடித்த கமல்ஹாசன்: ஆச்சரிய தகவல் 

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் சமூக வலைத்தளம் மூலம் உரையாடினார் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே.