close
Choose your channels

சூர்யாவுக்காக ஒரே படத்தில் மூன்று பாடல்கள் பாடிய விஜய்!

Saturday, June 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகர், டான்சர் மட்டுமன்றி சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பாடலாவது சமீபகாலமாக பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமகால நடிகரான சூர்யாவுக்கு ஒரே படத்தில் மூன்று பாடல்கள் விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் உடன் சூர்யா நடித்த திரைப்படம் ’பெரியண்ணா’. இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ’பார்வை ஒன்றே போதுமே’ படத்திற்கு இசையமைத்த பரணி இசையமைத்த இந்த படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியன் இரண்டு பாடல்களும் மலேசியா வாசுதேவன், ஹரிஹரன் மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தலா ஒரு பாடல்களையும் பாடியுள்ளனர். மீதி மூன்று பாடல்களையும் சூர்யாவுக்காக விஜய் பாடியுள்ளார் என்பதும் இதில் இரண்டு பாடல்கள் தனியாகவும் ஒரு பாடலை ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பெரியண்ணா படம் உருவானபோது விஜய் ஒரே நேரத்தில் நான்கு படங்கள் நடித்து பிசியாக இருந்தார். இருப்பினும் விஜய் தான் நடிக்காத படத்தில் சூர்யாவுக்காக 3 பாடல்களை தனது பிசியான ஷெட்யூலிலும் பாடிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.