close
Choose your channels

டுவிட்டரில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

Tuesday, May 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து தங்களது ரசிகர்களுக்கு அவ்வப்போது தகவல்களை அளித்து வருகின்றனர். தாங்கள் நடிக்கும் படம் மற்றும் சமூக கருத்துக்களை அவர்கள் தெரிவித்து வருவதால் நடிகர் நடிகைகள் உள்பட திரையுலகத்தினர் சமூகவலைத்தள கணக்கில் லட்சக்கணக்கில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறக்கும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களும் தற்போது டுவிட்டர் என்ற சமூக வலைதளங்களில் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பி உடன் இணைந்து ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தேன். கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்பட்டேன். எனவே தான் தற்போது ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன். அனைவரின் ஆதரவிற்கு நெஞ்சார்ந்த நன்றி’ என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்

நகைச்சுவை நடிகர் செந்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளது திரையுலக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.