close
Choose your channels

கொரொனோ கிடக்கட்டும், இதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிங்கய்யா! விஜய்சேதுபதியின் நக்கல் டுவீட்

Tuesday, May 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்லாமல் பசியால் வாடுகின்றனர். மத்திய மாநில அரசுகளும் சமூக ஆர்வலர்களும் ஏழைகளின் பசியை போக்க ஓரளவு உதவி செய்த வந்த போதிலும் இன்னும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பசியில் வாடுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் அரசு, தற்போது திடீரென டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்துள்ளது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலர் டாஸ்மாக் கடை திறப்பதற்கு கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் நக்கலுடன் கூறிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே’ என்று அவர் தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதியின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் ரசிகர்கள் ஆதரவு மற்றும் கண்டனங்களை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.