ஸ்ரீவில்லிபுத்தூர், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற துப்புரவு தொழிலாளி..!

  • IndiaGlitz, [Thursday,January 02 2020]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய பெண் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் அரசு ஊழியராக துப்புரவு பணி செய்து வந்தார் சரஸ்வதி. இவர் மக்கள் சேவையில் நாட்டம் ஏற்பட்டதால் கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணினார்.இதற்காக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.

கடந்த முறையே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் போனது. இதனால் தனது அரசு வேலையை பறிகொடுத்து ஏமாற்றத்தில் இருந்துவந்தார். அதன்பின்னர், சரஸ்வதி பஞ்சாயத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இருந்தபோதும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனது ஆர்வத்தை குறைக்காமல் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கபடட் நிலையில் கான்சாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி 1113 வாக்குகள் வாங்கி 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.வெற்றி பெற்ற சரஸ்வதி தான் மக்களுக்கு நல்லது செய்வேன் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.


More News

2 முறை தோல்வி. 3வது முறை ஜெயித்து ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வெற்றிபெற்றிருக்கிறார்.

சிம்புவின் அடுத்த பட போஸ்டரை வெளியிட்ட சுரேஷ் காமாட்சி!

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாயைக் கொன்றதற்காக சினிமா நடிகை கைது..!

பெற்ற தாயைக் கொலை செய்ததாக கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற நடிகையை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் செய்த வெட்னரி டாக்டர்..! வீடியோ.

ரஷ்யாவை சேர்ந்த கால்நடை டாக்டர் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த வீடியோ சமூகவலைத்தங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் பி வாசுவின் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'சந்திரமுகி' திரைப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் ஓடியது.