close
Choose your channels

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் மோசமாகி வருகிறது: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

Tuesday, June 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் மோசமாகி வருகிறது: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

 

கொரோனா அறிகுறியே இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பி வருகிறார்கள் என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கவலைத் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் பரவும் கொரோனா எண்ணிக்கை தற்போது பெரும்பாலும் அறிகுறிகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே சிலர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்திருக்கிற நிலையில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் விகிதம் அதிகரித்துக் கொண்டே வருவதாக டெட்ரோஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதன் அளவு 1 லட்சத்து 36 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் 75 விழுக்காடு அமெரிக்காவினுடையது என்பதும் குறிப்பிடத் தக்கது. கிழக்கு ஆசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா எண்ணிக்கை தற்போது சற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் தொடர்ந்து நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது என டெட்ரோஸ் கவலைத் தெரிவித்து உள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சில நாடுகள் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து வெளிவந்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றன. கடந்த 6 மாதமாக நாம் கொரோனா நோய்த்தொற்றை குறித்து முழுமையாக கணித்து வருகிறோம். நாம் நோயில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று சுயத் திருப்தி கொள்வதற்கு இது சரியான நேரமல்ல. நாடுகள் தொடர்ந்து பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா நோய் அறிகுறி இல்லாமல் பலர் சந்தேகத்துக்குரிய முறையில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே உலக நாடுகள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்திப் பேசினார்.

ஆப்பிரிக்காவில் தற்போது கொரேனா எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. வெறுமனே 1000 எண்ணிக்கையில் இருந்த நாடுகள் கூட தற்போது அதிக எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை பதிவான கொரோனா எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் மோசமாகிக் கொண்டே வருகிறது. குறைந்த எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது என உலக நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்தி வருகின்றன. ஆனால் இது பாதுகாப்பானது அல்ல எனவும் உலகச் சுகதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டு உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.